நாட்கள் நிறைய ஆகிவிட்டது
உள்ளங்கையை உற்றுப் பார்த்து.
ரேகைகள் அல்ல தெரிவது;
மறைத்து வைத்த சரித்திரங்கள்.
கைபற்றிய வெற்றிகள்,
மூடி மறைத்த பாவங்கள்.
துடைத்து அழித்த கண்ணீர் துளிகள்,
நிஜமாய் உழைத்த உழைப்புகள்.
எல்லாம் தெரிகிறது
ரேகைக்கு பின்னால்.
புறங்கை தழும்புகள்
பூமேல் புழுதி போல.
விழுந்து எழுந்த நாட்களை,
விரோதம் சேர்த்த நாட்களை.
வலியை ரசித்த நேரங்களை,
உடலை வருத்திய பயிற்சிகளை.
காய்ந்தும் மறையாது
மறைத்து காட்டுகிறது.
எங்கெங்கோ சென்று
எப்படியோ கற்று
இங்கு, இன்று நான் யார்?
பதில் கையில் தெரியவில்லை.
கணங்களில் தெரிகிறது
முதிர்ச்சி இன்னும் தொடர்கிறது என்று.
No comments:
Post a Comment