Thursday, November 24, 2011

பிறந்த திமிர்

ஜனணம் ஒரு சாதனையா?
இன்று வரை நினைத்ததில்லை அப்படி
பிறந்த நாள் கொண்டாட்டங்கள்
பெரிதாய் இருந்ததில்லை
இருந்தும்
இன்று நாள் எனதே எனது
என்று நான் சிளமுறை நின்னைத்தே இருக்கிறேன்

இன்றும் அப்படியே
இன்று தான் பிறந்தேனாம்
எனக்கு ஒன்றும் நினைவில் இல்லை
பெற்றவள் சாதனையே இது
நான் என்ன செய்தேன் கொண்டாட ?
இருந்தும்
ஜனித்த தர்க்கத்தில் நாளை துவங்கினேன்
இன்று மீண்டும் பிறந்தேன் ஒருமுறை

மமதையில் வேலையை பார்க்க
சாலை கடந்து   நான்
பார்த்தது ஒரு நிஜம்
தெரு முனையில் ஒரு பிணம்
இறந்து விட்டார் ஒருவர்
இன்று  அவர் இறந்த தினம் 

அந்த வீட்டில் அமைதியும் துயரமும்
என் உலகில் மகிழ்ச்சி எப்படி?
முரண்பாடான உலகிது
உணர்தேன் நான் இன்று
நாள்தோறும் பிறப்புண்டு இறப்புண்டு
நான் எப்படி சிறப்பின்று ?

இருபத்திஐந்து ஆண்டுகள் முடிந்தது
எதுவும் சாதித்தாய் தெரியவில்லை
உயிர்பிழைதிருந்தேன் இதுவரை
இதுபோல் கொண்டாட்டம் எதுவரை?
நன்றி கடவுளுக்கு இன்று உயிர் நிலைத்திருப்பதற்கு
இந்த ஆண்டை பார்த்துவிட்டேன்
எதிர்பார்கிறேன் அடுத்த ஆண்டை

இன்றைய மாற்றம் தொடர்ந்தால்
அடுத்த ஆண்டின் முதிர்ச்சி
இன்னும் அழகாக இருக்கும்
இன்றும் இன்றுவரை இறந்த அனைவருக்கும்
என் செய்தி இது
நீங்கள் சென்று விட்டீர்கள்
வந்து விடுவோம் நாங்களும் விரைவில் :)
உறங்குங்கள் அமைதியில்...

இங்கெதுவும் மாறவும் இல்லை
மாறப்போவதும் இல்லை.

Wednesday, March 30, 2011

யார் நான் ?

நாட்கள் நிறைய ஆகிவிட்டது
உள்ளங்கையை உற்றுப் பார்த்து.

ரேகைகள் அல்ல தெரிவது;
மறைத்து வைத்த சரித்திரங்கள்.

கைபற்றிய வெற்றிகள்,
மூடி மறைத்த பாவங்கள்.

துடைத்து அழித்த கண்ணீர் துளிகள்,
நிஜமாய் உழைத்த உழைப்புகள்.

எல்லாம் தெரிகிறது
ரேகைக்கு பின்னால்.

புறங்கை தழும்புகள்
பூமேல் புழுதி போல.

விழுந்து எழுந்த நாட்களை,
விரோதம் சேர்த்த நாட்களை.

வலியை ரசித்த நேரங்களை,
உடலை வருத்திய பயிற்சிகளை.

காய்ந்தும் மறையாது
மறைத்து காட்டுகிறது.

எங்கெங்கோ சென்று
எப்படியோ கற்று

இங்கு, இன்று நான் யார்?
பதில் கையில் தெரியவில்லை.

கணங்களில் தெரிகிறது
முதிர்ச்சி இன்னும் தொடர்கிறது என்று.

Tuesday, March 29, 2011

நான் ஒரு நடிகன்


நான் நிற்பதும் நடப்பதும் பொய்.

நான் சொல்வதும் செய்வதும்,

நானாய் வரையறுத்ததே.


தத்துவம் பொய் என்பவன் நான்.

பொய் போல் ஒரு தத்துவம் சொல்கிறேன் கேள்.

உன்னை புரிந்து விட்டேன்,

உன்னை அறிந்து விட்டேன்,

என ஒருவன் எண்ணி விட்டால்;

அன்று நீ ஜெயித்து விட்டாய்.

உன் ஒப்பனைகள் உபயோகம் ஆகியது.

நடிப்புதான் உலகம்.

ஆயிரம் சொல்லி ஆயிரம் செய்தாலும,

ஆழத்தில் ரகசியம் இல்லா மனிதனுண்டா?

ரகசியமாய் நீ ரகசியம் வைத்திருப்பது தெரிந்தும்,

உன் முன்னே மெய்யாய் சிரிப்பவன் நான்.

நீயும் அப்படியே.

ஒவ்வொருவனும் இங்கு ஒரு கதை.

நீயும் கதைதான் நானும் கதைதான்.

கதைக்களத்தில் எல்லாம் உண்மையல்ல;

நீ படிப்பதும் நான் படிப்பதும்,

பொய்யாய் போகலாம்.

இதெல்லாம் அறிந்தும் 

உன்னை நண்பாவென ஒருவன் இருந்தால்;

அவனே நடிப்பில் சிறந்தவன்.

சில நேரங்களில் பொய்கள் சிறந்தது.

பொய் இல்லாது போனால்.

மெயகிங்கேது மதிப்பு ??