ஜனணம் ஒரு சாதனையா?
இன்று வரை நினைத்ததில்லை அப்படி
பிறந்த நாள் கொண்டாட்டங்கள்
பெரிதாய் இருந்ததில்லை
இருந்தும்
இன்று நாள் எனதே எனது
என்று நான் சிளமுறை நின்னைத்தே இருக்கிறேன்
இன்றும் அப்படியே
இன்று தான் பிறந்தேனாம்
எனக்கு ஒன்றும் நினைவில் இல்லை
பெற்றவள் சாதனையே இது
நான் என்ன செய்தேன் கொண்டாட ?
இருந்தும்
ஜனித்த தர்க்கத்தில் நாளை துவங்கினேன்
இன்று மீண்டும் பிறந்தேன் ஒருமுறை
மமதையில் வேலையை பார்க்க
சாலை கடந்து நான்
பார்த்தது ஒரு நிஜம்
தெரு முனையில் ஒரு பிணம்
இறந்து விட்டார் ஒருவர்
இன்று அவர் இறந்த தினம்
அந்த வீட்டில் அமைதியும் துயரமும்
என் உலகில் மகிழ்ச்சி எப்படி?
முரண்பாடான உலகிது
உணர்தேன் நான் இன்று
நாள்தோறும் பிறப்புண்டு இறப்புண்டு
நான் எப்படி சிறப்பின்று ?
இருபத்திஐந்து ஆண்டுகள் முடிந்தது
எதுவும் சாதித்தாய் தெரியவில்லை
உயிர்பிழைதிருந்தேன் இதுவரை
இதுபோல் கொண்டாட்டம் எதுவரை?
நன்றி கடவுளுக்கு இன்று உயிர் நிலைத்திருப்பதற்கு
இந்த ஆண்டை பார்த்துவிட்டேன்
எதிர்பார்கிறேன் அடுத்த ஆண்டை
இன்றைய மாற்றம் தொடர்ந்தால்
அடுத்த ஆண்டின் முதிர்ச்சி
இன்னும் அழகாக இருக்கும்
இன்றும் இன்றுவரை இறந்த அனைவருக்கும்
என் செய்தி இது
நீங்கள் சென்று விட்டீர்கள்
வந்து விடுவோம் நாங்களும் விரைவில் :)
உறங்குங்கள் அமைதியில்...
இங்கெதுவும் மாறவும் இல்லை
மாறப்போவதும் இல்லை.
No comments:
Post a Comment