Tuesday, March 29, 2011

நான் ஒரு நடிகன்


நான் நிற்பதும் நடப்பதும் பொய்.

நான் சொல்வதும் செய்வதும்,

நானாய் வரையறுத்ததே.


தத்துவம் பொய் என்பவன் நான்.

பொய் போல் ஒரு தத்துவம் சொல்கிறேன் கேள்.

உன்னை புரிந்து விட்டேன்,

உன்னை அறிந்து விட்டேன்,

என ஒருவன் எண்ணி விட்டால்;

அன்று நீ ஜெயித்து விட்டாய்.

உன் ஒப்பனைகள் உபயோகம் ஆகியது.

நடிப்புதான் உலகம்.

ஆயிரம் சொல்லி ஆயிரம் செய்தாலும,

ஆழத்தில் ரகசியம் இல்லா மனிதனுண்டா?

ரகசியமாய் நீ ரகசியம் வைத்திருப்பது தெரிந்தும்,

உன் முன்னே மெய்யாய் சிரிப்பவன் நான்.

நீயும் அப்படியே.

ஒவ்வொருவனும் இங்கு ஒரு கதை.

நீயும் கதைதான் நானும் கதைதான்.

கதைக்களத்தில் எல்லாம் உண்மையல்ல;

நீ படிப்பதும் நான் படிப்பதும்,

பொய்யாய் போகலாம்.

இதெல்லாம் அறிந்தும் 

உன்னை நண்பாவென ஒருவன் இருந்தால்;

அவனே நடிப்பில் சிறந்தவன்.

சில நேரங்களில் பொய்கள் சிறந்தது.

பொய் இல்லாது போனால்.

மெயகிங்கேது மதிப்பு ??

No comments:

Post a Comment