Tuesday, September 11, 2012

தமிழனுக்கு விளங்கும் இது.

தோற்றத்தால் நான் வேறு - பிறர் 
கண்ணோட்டத்தால் நான் வேறு. 
மொழிகள் பல அறிந்தவன் நான். 
அறிவதனில்  அகழ்ந்தவன் நான். 

எழுத்து எனது பிழைப்பு,
எழுதுவதால் உயர்வெனக்கு.
தமிழனென்ற திமிரெனக்கில்லை;
தமிழ் கற்றுக் கொடுத்த பாடத்தினால். 

தமிழ் மட்டுமே அழகால் உயர்ந்ததல்ல முட்டாள்களே. 
தமிழ் அழகானது ஒரு விதத்தில்,
தமிழ் பிற மொழிகளின் சிறப்புனர்ந்தது மூடர்களே.
தமிழ் பேச உம்மில் எத்தனை பேருக்கு தகுதி இருக்குறது ?!

அழகான தமிழை கொச்சைப் படுத்த பிறந்த கிருமிகளே!
நீர் தமிழுக்கு செய்யும் இழுவினால், 
தமிழை நிஜத்தில் காதலிக்கும் நான் 
எத்தனை முறை உம்மை அழிக்க நினைத்திருக்கேன் தெரியுமா?

ஆம் என் எழுத்தில் பிழைகள் உள்ளது - 
என் கருதுத்தில் பிழை கான் மூடா! 
நினைவு தெரிந்த நாளிலிருந்து எழுதுபவன் நான்
என் மொழியின் மேலுள்ள காதலால் மட்டுமே 

நீ யாரென்று நினைத்துப் பார்.
கேவலத்தின் மறு பெயர் நீ.
வேசம் போடுகிறேனென்று உணர முடியாத பிறவி நீ.
அசிங்கத்தின் அர்த்தம் நீ.

எத்தனை மொழி படித்துள்ளாய் நீ ?
திருக்குறள் ஒன்றின் பொருள் காண முயர்ந்துல்லாய நீ? 
அவமானம் நீ எனக்கு !
எனக்கும் என்னை போன்ற தமிழருக்கும்.

ஆயிரம் இனத்தவர் புரளி பேசலாம்.
பொய்யின் கேவலம் பகிர்ந்த தமிழன் நீ பேசலாமா?
ஆராயும் அறிவு நமக்குரியது,
நீயோ புறம் பேசியே வாழ்வை கடக்கிறாய்.

நீ இருப்பதால் தமிழுக்கோ, உலகிற்க்கோ, எனக்கோ, 
எந்த பயனும் இல்லை மிருகமே.
மடிந்து போ தமிழ் வாழ -
செத்தொழி எம் மொழி வாழ.

உன்னைப் போன்ற கோடி பேர் இருப்பதும் 
நிஜமான பத்துத் தமிழனிருப்பதும் ஒன்றே பேடியே.
அழிந்து போ என் மொழிக்காக. 
மறைந்து விடு உனக்கு துளியேனும் நன்றி இருந்தால்.