நினைத்துக்கூட பார்க்கவில்லை
இப்படியும் நான் நினைப்பேன் என
நானும் மதித்து இருந்தேன் தேசத்தை
நாளுக்கு நாள் நடப்பதெல்லாம்
நன்மைக்கே என நம்பிக்கை
எனக்கும் இருந்தது ஒரு நாளில்
நான்கு மடங்கு பெருகிவிட்ட மக்கள்
நாடெங்கும் குவிந்திருக்கும் வளம்
ஊரெங்கும் ஓங்கி நிற்கும் ஒற்றுமை
என்றெல்லாம் புகழ்ச்சிப் புலம்பல்கள்
என் சிந்தனையையும் சிறைத்திருந்தது
நாட்கள் செல்லச் செல்ல
நடப்பதை கவனிக்க மறுக்க முடியாமல்
இந்நாட்களுக்கு முன்
நடந்ததையெல்லாம் நடந்து பார்க்க
நினைத்தது தவறு தான்
வரலாற்றின் வழிகளில்
வழிதவரித்தான் சென்றிருந்தேன்
வரையறுக்கப்பட்ட வரலாறல்ல
பள்ளி புத்தகங்களில் பதிக்கப்படாத
மக்களிடம் மறைக்கப்பட்ட வரலாறு
யாருக்கெல்லாம் தெரிந்திருந்ததோ
மறைக்க என்னவெல்லாம் காரணமோ
தெளிவாய் வரைந்த கோடுகளுக்கிடையில்
துல்லிய இடைவெளிகளை
தெரிந்தே தான் அறுத்தார்களோ
வெறுப்புக்கு விதை போடும் வரலாறு
நம் மூதாதையரின் மூடத்தனம்
அவர்கள் ரத்தத்தில் ஓடிய ரத்தவெறி
அந்நாளின் ஆட்சி மகுட அறியாமை
அணுக்களில் பிரயாணித்த அறியாமையுடன்
கரு தரித்த கணம்
துடிக்க வைத்த ரத்தத்தின் வெறியால்
நாம் பிறப்பால் மூடர்கள்
நாம் பிறப்பால் வெறியர்கள்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
அடியடியாய் வைத்து வந்த நாகரீகம்
சமூகக் கோடுகள் சேர்ந்து நிற்க
குறுநிலம் மாநிலமாகியும்
ஒரு நிலமாய் ஒரு நாளும் இருந்ததில்லை
இமயத்தின் மேல்பக்கமிருந்து
ஊடுருவி உள் நுழைந்து
அன்று ஆக்ரமித்த ஆரியன் தான்
இன்றும் ஆட்சி செய்கிறான்
ஒரு பக்கம் கடலழிக்க
மறுபக்கம் ஆரியனடிக்க
தமக்குள்ளும் வேற்றுமை தெறிக்க
சிதரித்திரிந்தான் திராவிடன்
அன்றே ஆரம்பிதத்திது
திராவிடனின் விருந்தோம்பலே அவனுக்கு வினை
ஆணவத்தால் முப்பதுக்கு மேல் பிரிந்த திராவிடன்
அவன் முன்னோர் வகுத்ததில்
பலவற்றை கழித்து பலதினை கூட்டி
தவறாகக் கணித்தான் பெருகப் பெருக
ஆக்கிரமிப்பு நிலத்தில் மட்டுமல்ல
மதத்திலும் கூட
ஒரே சிந்தனை பல வடிவங்களில்
ஓர் இறை நம்பிக்கை
வெவ்வேறு சமூகத்தில்
வெவ்வேறு பெயர்
ஒன்றாகக முயற்சியும்
ஆளுமைக்கு மட்டுமே
ஒன்றாக்க அன்று பிறந்தது
பல உருவச் சிலைகள்
புரிந்திராத இறைவனுக்கு
பல கல் இணைகள்
மூடத்தனம் முதி இருந்த நாட்கள்
பல கதைகள் பதிக்கப்பட்டு
நிஜம் பலவும் அழிக்கப்பட்டு
அடைத்திருந்த வழியை
தூசி தட்டி திறக்க வந்த
பலரில் ஒருவனே புத்தன்
சிலை ஒழிக்க வந்து
சிலயானவரில் அவனும் ஒருவன்
இவ்வளவும் நடந்திருக்க
நிலம் ஆனால் ஒன்றாகவில்லை
நிரந்தரமாய் இன்னிலையில்
வடக்கும் தெற்கும்
கோடிட்டு பிரிந்திருக்க
குப்தனும் முகலாயனும்
சோழனும் பாண்டியனுமாய்
பெரிதும் சிறிதுமாய்
நூறாய் மேலாய் பிளந்திருந்தது நிலம்
ஆங்கிலேயன் அடி இல்லாமல் போயிருந்தால்
அருவதாய் அதற்கு மேலாய்
பிறிந்திருக்கும் இந்த நாடு
அவன் தான் வரைந்தான் கோடுகளை
மாறாக நடந்திருந்தால்
மொழிக்கிரண்டு நாடுகளாய்
கோட்டுக்குள் மதத்தாலும்
கோட்டினை நீட்டவும்
சண்டையிட்டு சண்டையிட்டு
சீனர்களிடம் சிக்கி சிதந்திருப்போம்
இருந்தும் பொய்யாய் புகழ் பாடி
இல்லாத வரலாற்றை
இயற்றிய அந்த சிலர்
இல்லாமல் போயிருந்தால்
இன்று நாம்
இல்லாமலே போயிருப்போம்
இருந்தும் இந்நாள் வரை
வெறுப்பதே விருப்பமாய்
அறியாமையில் அடித்துக்கொண்டே அழிவதுதான்
பொழுது போக்க நாம் முயல்வது
தான் நினைப்பதே நிஜம் என்று
எதிர்ப்பவனை வெட்டித் தீர்க்க
நினைக்காதவன் இந்த நாட்டில் எவனுமில்லை
அதிர்ச்சி ஒன்றும் இல்லை இதை உணர்ந்ததில்
கேவலம் நாம் பிறப்பால் வெறியர்கள்
இந்த வெறிக்கும்பலில்
சேர்ந்திருக்க ஆசையில்லை எனக்கு
தனி மரமாய் தளர்ந்து விழுவதே மேல்
தோப்பாய் எரிந்து மடிவதற்கு
கேட்கிறது உங்கள் ஆணவக் குறள்
வெளியேற்றக் கத்துவது
நான் நிஜமனைத்தும் சொல்லியிருந்தால்
நிலம் அதிர்ந்திருக்கும்
சொல்லியது சிலதே ஆனால்
கதையென்று ஒன்றுமில்லை
பதில் சொல்ல பயமும் இல்லை
பதில் சொல்லிப் பயனும் இல்லை
பதில் எதையும் மாற்றவும் போவதில்லை
அதற்கு உங்களுக்கு தகுதியும் இல்லை
வெளியேறவும் மாட்டேன்
நிலமென்றும் எவனுக்கும் சொந்தமில்லை
இன்று நீங்கள் இங்கு
நாளை எவனோ
இங்குதான் பிறந்தேன்
நிலத்திற்கு நான் சொந்தம்
வேண்டுமென்றால் கொன்று விடுங்கள்
அதுவொன்றும் புதிதில்லையே உங்களுக்கு
ஆம் நான் சமூக விரோதிதான்
உங்களின் இந்த விளங்காத
சமூகத்தில் சேர விரும்பாத
தனி ஒருவன் நான்